ஆட்டோ சாரதிகளுக்கு தொழிற்பயிற்சி – தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபை!

Sunday, February 17th, 2019

இந்த ஆண்டு ஒரு இலட்சம் ஆட்டோ சாரதிகளுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்க தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபை தீர்மானித்துள்ளது.

முதற்கட்டமாக 2,000 பேருக்கு தொழில் பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்த அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் 78 இலட்சம் ஆட்டோக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் 10 இலட்சத்துக்கு மேற்பட்டோர் தமது வாழ்வாதாரத் தொழிலுக்காக ஆட்டோக்களைப் பயன்படுத்தி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தொழிற்பயிற்சியில் இணைந்துகொள்ள விரும்புவோர் 1951 என்ற இலக்கத்துக்கோ அல்லது 011-228 8782 என்ற தொலைபேசி இலக்கத்துக்கோ அழைப்பை ஏற்படுத்தி பதிவுகளை மேற்கொள்ள முடியுமெனத் தொழிற்பயிற்சி அதிகார சபை தெரிவித்துள்ளது.

Related posts: