ஆசிரியர் வெற்றிடங்களை பாடசாலை மட்டத்தில் நிரப்ப நடவடிக்கை -பிரதமர்!

Wednesday, February 1st, 2017

ஆசிரியர் வெற்றிடங்களை பாடசாலை மட்டத்தில் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தேசிய கல்வி நிறுவகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று உரையாற்றிய போது பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் காலங்களில் ஆசிரியர் நியமனங்கள் தேசிய மட்டத்திலோ அல்லது மாகாண மட்டத்திலோ மேற்கொள்ளப்படாது.

பாடசாலைகளில் ஏற்படும் வெற்றிடங்களை நிரப்பும் வகையில் நியமனங்கள் வழங்கப்படும். பாடசாலை மட்டத்தில் ஏற்படும் வெற்றிடங்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு அவை நிரப்பப்படும்.

பாடசாலை பரிசோதனை சபை முறைமை மீளவும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அனைத்து பாடசாலைகளினதும் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வகுப்புக்கள் தெடர்பிலும் இந்த சபையின் ஊடாக அறிக்கை பெற்றுக் கொண்டு பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

திறமையற்ற அதிபர்களை நியமித்தால் அதற்கான பொறுப்பினை கல்வி அமைச்சரும் மாகாண கல்வி அமைச்சரும் ஏற்றுக்கொள்ள நேரிடும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

ranil-1

Related posts:

எதிர்வரும் இரண்டு வாரங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் - பொது சுகாதார ஆய்வாளர்கள் ...
இரு வாரங்களில் வழமைக்கு திரும்பும் நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையம் – இலங்கை மின்சார சபை தெரிவிப்பு...
கல்வித்துறை மறுசீரமைக்கப்படாவிட்டால், மாணவர்கள் உயர் கல்வியை விட்டு விலகி வேறு வழிகளில் ஈடுபடுவதை தவ...

இராணுவ உபகரணங்களை ரஸ்யாவிடமிருந்து கொள்வனவு செய்யும் முயற்சியில் இலங்கை - மொஸ்கோவிற்கான இலங்கை தூதுவ...
அரசாங்கம் உளவியல் யுத்தத்தில் ஈடுபடுகின்றது - இலங்கை ஆசிரியர் சேவையின் பிரதம செயலாளர் குற்றச்சாட்டு...
ஈஸ்டர் தாக்குதல் அறிக்கையின் பிரதியொன்றை தமக்கு வழங்குமாறு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ...