ஆசிரியர் கூகயீன விடுமுறை – யாழில் வெறிச்சோடிய பாடசாலைகள்!
Monday, April 25th, 2022அதிபர், அசிரியர் சங்கங்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள நிலையில் யாழ்.மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.
நாட்டின் பொருளாதார நெருக்கடி, மற்றும் ஆசிரியர்மாணவர் போக்குவரத்திற்கு தீர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் இன்று இடம் பெற்றது.
இந்நிலையில் யாழ்.மாவட்டதில் பெரும்பாலான பாடசாலை களில் ஆசிரியர் வரவு மிக குறைவாக காணப்பட்டதுடன் மாணவர்கள் வரவும் குறைவாக காணப்பட்டதால் இதன் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைந்ததுடன் பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நடவடிக்கை - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க!
பூநகரியில் தீ எல்லை மீறியது - 250 தென்னம்பிள்ளைகளும் வீட்டின் ஒரு பகுதியும் கருகின!
நாடளாவிய ரீதியில் ஊரடங்கை அமுல்படுத்துவதில் எந்தப் பயனும் கிடையாது - சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிய...
|
|