ஆசிரியர் – அதிபர்களின் பிரச்சினையை உடனடியாக தீர்ப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு – அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!
Tuesday, August 10th, 2021ஆசிரியர், அதிபர்களின் வேதன பிரச்சினையை, உடனடியாக தீர்ப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆசிரியர், அதிபர்களின் பிரச்சினை குறித்து ஆராய்ந்து அமைச்சரவைக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
அரசியல் காரணங்களால் அதிபர் நியமனம் தாமதம் - வடக்கு மாகாண புதிய அதிபர் சங்கம் தெரிவிப்பு!
அனுமதி அட்டை கிடைக்காத பரீட்சார்த்திகள் தொடர்புகொள்ளவும் - பரீட்சைகள் திணைக்களம்!
குழந்தை தொழிலாளர் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.!
|
|