ஆசிய அபிவிருத்தி வங்கி 8 பில்லியன் நிதியுதவி – இன்றுமுதல் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு வைப்பிலிடும் பணிகள் ஆரம்பம்!

Thursday, December 29th, 2022

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நாட்டின் சகல விவசாயிகளுக்காக வழங்கப்பட்ட 8 பில்லியன் ரூபா நிதியை விவசாயிகளின் வங்கி கணக்கில் வைப்பிலிடும் பணிகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

இந்தமுறை பெரும்போகத்தில் 8 இலட்சம் ஹெக்டெயர் நிலப்பரப்பில் நெற்செய்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

அதில் 7 இலட்சத்து 60 ஆயிரம் ஹெக்டெயர் நிலப்பரப்பில் தற்போது வரை நெல் பயிரிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையிலான விவசாய குடும்பங்களின் எண்ணிக்கை 1.2 மில்லியனாகும் என்பதுடன், கடந்த பெரும்போகத்தின் அறுவடையில் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய, ஆசிய அபிவிருத்தி வங்கியினால் 8 பில்லியன் ரூபா இலங்கைக்கு வழங்கப்பட்டது.

இதன்படி, ஒரு ஹெக்டெயர் நிலப்பரப்பை கொண்ட விவசாயிகளுக்கு 10,000 ரூபாவையும், 2 ஹெக்டெயர் நிலப்பரப்பை கொண்டோருக்கு 20 000 ரூபாவையும் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு வைப்பிலிடுமாறு விவசாய அமைச்சர் ஆலோசனை வழங்கியிருந்தார்.

இன்றை தினம் அதற்கான செயற்பாடுகள் விவசாய அமைச்சில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

நாம் ஆட்சிக்கு வந்தது கொழும்பிலிருந்து ஆட்சி செய்வதற்கல்ல – கிராம மக்களிடம் சென்று அவர்களின் தேவைகளை...
இலங்கை கொரோனா தொற்றின் ஆபத்தான நிலையிலிருந்து மீண்டெழுந்துவிட்டது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின்...
பல்கலைக்கு அனுமதிக்கப்படும் வரையான 10 மாதங்களுக்கும் மேலான காத்திருப்பு இடைவெளியை நீக்குவதற்கு நடவட...