ஆசியாவின் அதிசயம் 2018  மாச்சில்!

Tuesday, October 3rd, 2017

கொழும்பில் அமைக்கப்பட்டு வரும் ஆசியாவின் அதிசயம் என அழைக்கப்படும்  தாமரைக் கோபுரம் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்பட உள்ளது.

இதற்குரிய திட்டப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும்இ உட்புற மற்றும் வெளிப்புறபணிகள் தற்போது நடைபெற்று வருவதாவும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவரைமேற்கோள்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சீனாவின் எக்ஸிம் வங்கியின் 104.3 மில்லியன் ரூபா நிதியில் இத் திட்டம் சென்ற 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதிஆரம்பிக்கப்பட்டது. அத் திட்டத்தின் முதற் பணிகளை 912 நாட்களில் பூர்த்திசெய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இக் கோபுரத்தில் 50தொலைக்காட்சிகள் மற்றும் 35 வானொலிகள் சேவைகளுக்கு இணைப்புக்களை வழங்கவுள்ளன. அத்துடன் மாபெரும் விற்பனைகூடங்கள்  உணவகங்கள் காட்சியறைகள் உட்பட மேலும் பல வசதிகளும் இந்தத் தாமரை கோபுரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Related posts: