அழிந்துபோன தேசத்தினது இழப்புக்கள் அனைத்தையும் அர்த்பூர்வமான வகையில் மாற்றியமைக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!
Monday, October 10th, 2016
கடந்த காலத்தில் முல்லை மண் கண்ட பேரழிவுகளிலிருந்து மீண்டு, மீண்டும் ஒரு வழமான தேசமாக கட்டியெழுப்புவதற்காக உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதை நீங்கள் நன்கு பயன்படுத்தி அரசியல் உரிமைகளையும், வாழ்வியல் அபிவிருத்திகளையும் கொண்ட வளமான தேசமாக உங்களது தேசத்தை உருவாக்கிக்கொள்ள எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தாவுடன் அணிதிரண்டிருப்பதனூடாக நிதர்ஷனமாக்கியுள்ளது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் முல்லைத்தீவில் நடைபெற்ற கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெ ரிவிக்கையில் –
அழிந்துபோன தேசத்தினது இழப்புக்கள் அனைத்தையும் ஒரு அர்த்பூர்வமான வகையில் மாற்றியமைத்து ஒரு வளமான தேசத்தை உருவாக்குவதற்காகவே எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அயராது உழைத்துவருகின்றார். அவரது அரசியல் பயணத்திற்கு மேலும் அதிக வலுச்சேர்ப்பதற்கு நீங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
உங்களது எதிர்கால கனவுகளை முள்ளிவாய்க்காலுடன் புதைத்துவிட்டதாக எண்ணிவிடாதீர்கள். அவலப்பட்டு நிற்கும் மக்களை தூக்கி நிறுத்தி கரைசேர்ப்பதற்காக உங்களுக்கு கரங்கொடுக்க டக்ளஸ் தேவானந்தா என்னும் தன்னிரற்ற வழிகாட்டி எம் தேசத்தில் உள்ளார். அவரது அரசியல் பலம் மேலும் அதிகரிக்கும் போதுதான் மக்களது வாழ்வியலும் மேம்பாடடைந்துசெல்லும்.
இனிவருங்காலங்கள் உங்களுடைய வாழ்வியலக்கான தீர்வுகளாகளை எட்டும் காலங்களாக அமையவேண்டும். அதற்கான பாதையை உருவாக்குவதற்கு டக்ளஸ் தேவானந்தா தவைலமையிலான நாம் என்றும் தயாராகவே இருக்கின்றார். நீங்களும் தயாராக இருக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். – என்றார்
Related posts:
|
|