அலுவகத்தின் செலவுகள் 60 % குறைப்பு! -ஜனாதிபதி

Friday, April 1st, 2016
ஜனாதிபதி அலுவலகத்தின் செலவுகள் நூற்றுக்கு அறுபது விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது –
வெளிநாட்டுப் பயணங்களுக்காக தான் ஒருபோதும் தனிப்பட்ட விமானங்களை எடுத்துச் செல்லாது சாதாரண பயணிகள் விமானத்திலேயே மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு பிரிவினருடன் சென்று வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சின் புதிய கட்டடத் தொகுதியை நேற்று(31) திறந்து வைத்து உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் –
“நிதி ஒழுக்கம் மற்றும் நிதி முகாமைத்துவம் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது அரசியல்வாதிகளைப்போன்று அரச அதிகாரிகளினதும் பொறுப்பாகும். வருடாந்த இலக்குகளை அடைந்து கொள்வதற்கு வருடத்தின் ஆரம்பம் முதலே பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தையும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் நிதி ஒழுக்கமும் சிறந்த முகாமைத்துவமும் பேணப்பட வேண்டும்.”என்றார்.
1400 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த 7 மாடி கட்டடத் தொகுதி அதிநவீன வசிகளைக் கொண்டிருப்பதோடு, இது முழுமையாக நம்நாட்டு பொறியியலாளர்களின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ரிஷாத் பதுர்தீன், டி.எம்.சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன், நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Related posts:


நான்கு மாதங்களுக்கு எந்தவொரு வைபவங்களுக்கும் அனுமதி வழங்காதிருக்க யோசனை - இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி...
பயணக் கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து கொரோனா நோயாளர்கள்- இறப்புகள் அதிகரிப்பு - இர...
புதிய கல்விக் கொள்கை - ஜனாதிபதி தலைமையில் 10 பேரடங்கிய உப குழுவை நியமிக்க அரசாங்கம் அங்கீகாரம்!