அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவு!

அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்றுடன்(25) நிறைவடைவதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்தார
இன்று(25) நண்பகல் 12 வரை விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மரண தண்டனையை நிறைவேற்றும் அலுகோசு பதவிக்காக வெளிநாட்டு பிரஜையொருவரை நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அலுகோசு பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில், கிடைத்துள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் வெளிநாட்டவரை அலுகோசு பதவிக்கு நியமிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும், குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை- ஐ.நா.பேரவை!
ஊர்காவற்துறையில் கொலை நடந்த போது சந்தேகநபர்கள் யாழில் இருந்தனர் சி.சி.டி.வி கெமராவில் ஆதாரம்?
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு சிங்கப்பூர் பயணத்தடை விதிப்பு!
|
|