அரிசி தேங்காய் போன்று உள்நாட்டு நடவடிக்கைகள் மூலம் எரிபொருள் விலைகளை குறைக்க முடியாது – நிதிய அமைச்சர் சுட்டிக்காட்டு!
Sunday, July 25th, 2021அரிசி தேங்காய் போன்று எரிபொருள் விலைகளை குறைக்க முடியாது என அமைச்சர் பசில்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு நடவடிக்கைகள் மூலம் அரிசி தேங்காய் போன்றவற்றின் விலைகளை குறைப்பது இலகுவானது.
அதேபோன்று எரிபொருள்களின் விலைகளை உள்நாட்டு நடவடிக்கைகள் மூலம் குறைக்க முடியாது எனவும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள நிலைமையில் எனக்கு எரிபொருள் விலைகளை குறைக்க விருப்பம் தான். ஆனால் இது வெளிநாடுகளுடன் தொடர்புபட்ட விடயம் என்பதால் அதை முன்னெடுக்க முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
அதேநேரம் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் 6000 பேர் பணியாற்றுகின்றனர் ஆனால் ஒபேக்கில் 300 பேரே பணியாற்றுகின்றனர் எனவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உண்மை நீதி ஆணைக்குழு ஜனவரியில் அமைக்கப்படும் - பிரதமர் ரணில் உறுதி!
வேலையில்லா பட்டதாரிகள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
அரச தனியார் ஒத்துழைப்புக்கான தேசிய நிறுவனத்தை மூடுவதற்கு அனுமதி!
|
|