அரச வைத்திய அதிகாரிகளது பணிப்புறக்கணிப்பு நிறைவு!
Friday, May 18th, 2018
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நேற்று(17) காலை 8 மணிக்கு ஆரம்பித்த ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் இன்று(18) காலையுடன் நிறைவடைகின்றது.
குறித்த வேலைநிறுத்த போராட்டம் சிங்கப்பூருடன் இலங்கை அரசு செய்து கொண்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டம் மற்றும் சிங்கப்பூர் இலங்கை வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ஒஸ்ரின் பெர்ணாண்டோவிடம் வினாவிய போது குறித்த பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு எதிர்வரும் 22 ஆம் திகதி அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Related posts:
விடுமுறை காலப்பகுதியிலும் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் விநியோகம்!
அடுத்த 3 வாரங்களில் டெல்டா தொற்று மோசமடைய வாய்ப்பு – மக்களின் பொறுப்பற்ற நடமாட்டத்தைத் தடுக்க காத்தி...
சுப்பர் டீசல் - ஒக்டென் 95 ரக பெற்றோல் சந்தையில் 10 சதவீதம் குறைவாகவே உள்ளது – அமைச்சர் கஞ்சன விஜேசே...
|
|
|


