அரச பதவிகளில் 8000 பட்டதாரிகள்!

Thursday, June 30th, 2016

தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அதிகாரிகளாக 8000 பட்டதாரிகளை இணைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் சட்டமூலத்திற்கு அமைய இது நடைமுறைபடுத்தப்படவுள்ளதாகவும், இதற்கமைய குறித்த பட்டதாரிகளில் 8000 பேரை அரச நிறுவனங்களுக்கு இணைத்துக்கொள்ள தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அரச சேவைக்கு முதற் தடவையாக இவ்வாறான பட்டதாரிகள் நியமிக்கப்படவுள்ளதாகவும், அடுத்த மாதம் அளவில் பட்டதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


மக்களுக்கான  சேவையை நான் இதயசுத்தியுடன் செய்திருக்கிறேன் - முன்னாள் மாகாணசபை உறுப்பினர் தவநாதன்!
கொரோனா தொடர்பான சுதேச வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கு ஒவ்வொரு பிரதேசத்திலும் சமூக மருத்துவ உத்...
2.9 மில்லியன் குடும்பங்களுக்கு நாளை முதல் இலவச அரிசி விநியோகம் - விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவ...