அரச நிறுவனங்களுக்கான புதிய கட்டட நிர்மாணப் பணிகளை ஒத்திவைக்க தீர்மானம் – நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவிப்பு!
Wednesday, September 9th, 2020அடுத்த இரண்டு வருடங்களுக்கு அரச நிறுவனங்களுக்கான புதிய கட்டடங்களை நிர்மாணிக்கும் பணிகளை பிற்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் செலவுகளை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அனைத்து அமைச்சின் செயலாளர்களுக்கும் அனைத்து இராஜாங்க அமைச்சின் செயலாளர்களுக்கும் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகளின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், நிர்மாணப்பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ள கட்டடங்கள் தொடர்பில் திறைசேரிக்கு அறிவித்து அதற்கான நிதியை ஒதுக்கிக்கொள்ள முடியும் எனவும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
மாலைதீவு அரசாங்கத்திற்கும் பிரித்தானியாவுக்கும் ராஜதந்திர ரீதியில் முறுகல் நிலை!
புகையிரத சேவையில் மாற்றம்!
வாரிசு அரசியலில் எனக்கு நம்பிக்கையில்லை – அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு!
|
|