அரச நிறுவனங்களில் மீதி வரிப்பணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அதிரடி நடவடிக்கை!

Tuesday, June 25th, 2024

அரச நிறுவனங்களில் அறவிடப்பட வேண்டிய மீதி வரிப்பணத்தை அறவிடுவதற்கு அவசியமான சகல நடவடிக்கைகளையும் எதிர்காலத்தில் எடுக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அறவிடப்பட வேண்டிய மீதி வரித்தொகை தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் அத்தோடு முதலாவதாக எமது நாட்டின் வரிச் சட்டத்தில் காணப்படும் மேன்முறையீட்டு உரிமையானது முழு உலகத்திலும் உள்ளது.

அரசாங்கத்தினால் குத்தகை செலுத்துமாறு குறிப்பிட்டால் சட்டத்தின் முன்னால் சென்று மேன்முறையீடு செய்து அரசாங்கமாக இருந்தாலும் எங்களால் இதனை செலுத்த முடியாது என்று சட்டத்தால் நீதிமன்றத்திடம் செல்ல மக்களுக்கு உரிமை உள்ளது.

உலகில் ஆகக் குறைந்த வருமானம் கிடைக்கப்பெற்றாலும் ஏதோ ஒரு இடத்திற்கு நாட்டைக் கொண்டு செல்கிறோம். 

இந்தநிலையில், அறவிடப்பட வேண்டியவற்றை அறவிடாது புதியவற்றை மேற்கொள்ள முயற்சிப்பதாக எதிர்க் கட்சியினர் தற்போது சொல்ல முயற்சிக்கின்றனர். 

அது ஒரு தர்க்கமாகும் அத்தோடு அறவிடப்பட வேண்டிய மீதி வரித்தொகை பற்றி அரசாங்கமாக தெளிவுபடுத்த வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: