அரச திணைக்களங்களில் வீண்விரயங்கள் அதிகரிப்பு – இது நாட்டுக்கு பாரிய பிரச்சினையை ஏற்படுத்துகின்றது என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவிப்பு!

Wednesday, June 21st, 2023

000

திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் வீண் விரயங்கள் காணப்படுவதாகவும் இது நாட்டுக்கு பாரிய பிரச்சினை என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வரவு செலவு திட்ட அலுவலகம் சட்டமூலம் மீதான நேற்றைய விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இந்த வீண் விரயங்களை கட்டுப்படுத்த முன்னுரிமையளித்து செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வீண் விரயங்களை குறைத்துக் கொள்வதே எமது இலக்காகும். அதனை முக்கியமான இலக்காகக் கொண்டு அதற்கு முன்னுரிமையளித்து நாம் செயற்படவேண்டியது அவசியமாகும்.

யார் என்ன சொன்னாலும் திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் வீண் விரயங்கள் கிடையாது என எவராலும் கூற முடியாது. இது நாம் முகம் கொடுக்கும் பாரிய பிரச்சினையாகும்.

சில புள்ளி விபரங்களில் காணப்படும் பிழைகள் மற்றும் அதிலிருந்து திசை திருப்பும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மோசடிகள் குறிப்பிடத்தக்கவை.

இவ்வாறான மோசடிக்காரர்களின் சுமையையும் இறுதியில் திறைசேரி அல்லது நாடாளுமன்றத்திற்கே பொறுப்பேற்க வேண்டியுள்ளது. அது பொது மக்களுக்கான பாரிய பாதிப்புகளுக்கே வழிவகுக்கும் எனக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


பாதீட்டினூடாக அரச ஊழியர்களது ஊதிய விவகாரத்திற்கு தீர்வு - நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நிதி அ...
நாட்டை மீளக் கட்டியெழுப்ப, மக்கள் விரும்பாத முடிவுகளை எடுக்கவும் தயார் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டுவரும் இந்திய மீன்பிடியாளர்களை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ் இந்திய துண...