அரசியல் கட்சி, கொள்கைகளுக்கு இடமளிக்காது நாடு எனும் ரீதியில் சவால்களை வெற்றி கொள்ள ஒத்துழைக்கவும் – பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஜனாதிபதி கோரல்!

Monday, May 16th, 2022

அரசியல், கட்சிக் கொள்கைகளுக்கு தற்போதைய நிலையில் முக்கியத்துவம் வழங்காது நாடு என்ற ரீதியில் எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றி கொள்ள சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க முன்வர வேண்டும் எனவும் இதன்போது ஜனாதிபதி கேட்டுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts: