அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் நிலையில் இருந்து பதவி விலகிய பேராசிரியர்!

Saturday, June 27th, 2020

அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் நிலையில் இருந்து பேராசிரியர் ஜயந்த தனபால பதவிவிலகியுள்ளார்.

இது தொடர்பான கடிதம் ஒன்றையும் அவர் பேரவைக்கு அனுப்பியுள்ளார்.

அத்துடன் தமது முடிவுக்கு சுகவீனமே காரணம் என்று அவர் இராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அவரின் முடிவை அரசியலமைப்பு பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது. இதனையடுத்து இந்த வெற்றிடத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒருவரை நியமிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதேவேளை அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தின் படி நாடாளுமன்ற அதற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும்.

எனவே பெரும்பாலும் இந்த வெற்றிடத்திற்கான புதிய நியமனம் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு பின்னர் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts:

சிறுவர் துஷ்பிரயோகத்தைக் கட்டுப்படுத்த அனைத்துத் தரப்புக்களின் ஒத்துழைப்புக்களும் அவசியம்: யாழ். மாவ...
இடைநிலை தர மாணவர்களை இணைத்துக் கொள்ளும் அதிகாரம் தேசிய பாடசாலை அதிபருக்கு வழங்குவதற்கு கல்வி அமைச்சு...
சுபகிருது ஆண்டு முடிவடைந்து சோபகிருது ஆண்டு பிறந்தது - அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!