அரசாங்கம் 2020ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்யும் – அமைச்சர் தயா கமகே!

Monday, October 23rd, 2017

இந்த அரசாங்கம் எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாக ஆட்சி செய்யும் என்று ஆரம்ப தொழிற்றுறை அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

நாட்டின் கடன் பழுவும் குறைக்கப்பட்டு பொருளாதாரத்தில் உறுதியான நிலை ஏற்படும் என்றும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.

புத்தளம் பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்ட அமைச்சர் நாட்டை கட்டியெழுப்புவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சமகால அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

அரசாங்கத்தின்  அபிவிருத்தி திட்டங்கள் 2020ம் ஆண்டளவில் மிகக் கூடுதலான பலாபலன்களை பொதுமக்களுக்கு வழங்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts: