“அம்பான்” சூறாவளி : யாழ். மாவட்டத்தில் 66 குடும்பங்கள் பாதிப்பு – மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர்!

Tuesday, May 19th, 2020

இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் காற்றின் தாக்கத்தின் காரணமாக 66 குடும்பங்களைச் சேர்ந்த 229 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமை பிரிவிற்கு அறிக்கையிடப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் என்.சூரிராஜ் தெரிவித்துள்ளார்

அத்துடன் “அம்பான்” சூறாவளியின் தாக்கமானது நாட்டின் பல்வேறுபட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்றின் வேகமானது சற்று உயர்வாக காணப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

கடந்த பதினேழு மற்றும் பதினெட்டாம் திகதி வீசிய காற்றின் தாக்கத்தின் காரணமாக குறித்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிலும் குறிப்பாக நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 14 குடும்பங்களைச் சேர்ந்த 54 அங்கத்தவர்களும் உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 அங்கத்தவர்களும் நல்லூர் பிரதேச செயலகத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று அங்கத்தவர்களும் பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த 166 குடும்பங்களுமாக மொத்தமாக 66 குடும்பங்களைச் சேர்ந்த 229 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்  மேலும் குறித்த காற்றின் தாக்கத்தின் காரணமாக 47 வீடுகள் இதுவரை பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மேலும் ஓரிரு நாட்களுக்கு குறித்த காற்றின் தாக்கமானது கூடுதலாக காணப்படுவதன்  காரணமாக கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் வளிமண்டலத் திணைக்களத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பாக  மீனவர் சமூகத்தினர் விழிப்பாக செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது

காற்றின் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts:


யாழ் மாநகர சபை உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்ட கம்பரெலிய திட்டங்களில் மோசடி: ஆராயப்பட வேண்டும் என்...
ஒரு பில்லியன் டொலரை எட்டும் இலக்குடன் இலங்கை - இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நம்பிக்கை!
அதியுச்ச பாதுகாப்பு வளையத்துள் கொழும்பு - 12 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டின் ஆட்சிப்பொறுப்பு மாறக்கூ...