அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து வடபகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுப்பது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றேன் – அமைச்சர் சரத் வீரசேகர!

Saturday, April 3rd, 2021

இளையோருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் அவர்கள் சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தடுத்து நிறுத்த முடியும் என சுட்டிக்காட்டியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து வடபகுதி இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கு நான் யோசித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

யாழ்.,வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் புதிதாக அமைக்கப்பட்ட பொலிஸ் நிலையத்தை நெற்றையதினம் திறந்துவைத்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்

தற்போது நாடு முழுவதும் 494 பொலிஸ் நிலையங்கள் காணப்படுகின்றன. அதற்கு மேலதிகமாக இன்னும் 190 பொலிஸ் லையங்களைப் புதிதாக அமைக்கவுள்ளோம்.

அந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் வட பகுதியில் குறிப்பாக பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் முகமாக தற்போது இரண்டு புதிய பொலிஸ் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று புங்குடுதீவிலும் வெகுவிரைவில் புதிதாக பொலிஸ் நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் வடமராட்சி கிழக்குப் பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பில் பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.ஆனால், இங்குள்ள வேலையில்லாப் பிரச்சினைதான் இந்த மணல் கடத்தலுக்குக் காரணமாக இருக்கின்றது.

எனவே, கல்வி கற்று வேலையில்லாமல் இருப்பவர்களுக்கும் மற்றும் கல்வியை இடையில் நிறுத்தி வேலையில்லாமல் இருப்பவர்களுக்கும் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் இந்தச் சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுத்து நிறுத்த முடியும் என நம்புகின்றேன். அந்தவகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து வடபகுதி இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கு நான் யோசித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வடக்கு மாகாண சபையில் ஆட்சியில் இருந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், மத்திய அரசால் வடக்கின் அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் அரைவாசி நிதியைப் பயன்படுத்தாது திறைசேரிக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இந்த நிலைமைதான் இங்கே காணப்படுகின்றது. ஆகவே, மாகாண சபை என்பது மக்களுக்குப் பிரயோசனமான ஒரு விடயமாக அமைய வேண்டும் என்று சுட்டிக்காட்டியிருந்ததுடன் இந்த அரசு மாகாண சபை முறைமை வேண்டும் எனத் தீர்மானிக்குமானால் அந்தத் தீர்மானத்தை நான் எதிர்க்கப் போவதில்லை என்றும் வடக்கு மக்கள் மாகாண சபையை விரும்புகின்றார்கள். வடக்கில் மாகாண சபை இல்லாது போய் மூன்று வருடங்கள் ஆகிவிட்டன என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:


நாட்டின் அதி முக்கிய தெரிவுக்குழுக்கான உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கை அடுத்த வாரம் - நாடாளுமன்...
அதிக விலையில் பொருட்கள் விற்பனை செய்தால் உடன் தெரியப்படுத்துங்கள் - யாழ். மாவட்ட மக்களிடம் அரச அதிபர...
சீனா செல்லத் தயாராகிறார் ஜனாதிபதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க - சீனக் கப்பல் சர்ச்சைக்கும் தீர்வு க...