அமைச்சர் அலி சப்ரி இந்த வாரம் ருமேனியா மற்றும் போலந்திற்கு நான்கு நாள் விஜயம் – புக்கரெஸ்டில் புதிய இலங்கைத் தூதரகத்தையும் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைப்பார் என தகவல்!
Tuesday, July 16th, 2024
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்த வாரம் ருமேனியா மற்றும் போலந்திற்கு நான்கு நாள் விஜயத்தில் ஈடுபடவுள்ளார்.
வெளியுறவு அமைச்சின் கூற்றுப்படி, அமைச்சர் ஜூலை 16 முதல் 19 வரை இரு நாடுகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அவர் தனது அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்தின் ஏனைய மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சந்திக்கவுள்ளார்.
2023 இலிருந்து செயல்படத் தொடங்கிய புக்கரெஸ்டில் புதிய இலங்கைத் தூதரகத்தையும் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது
000
Related posts:
ஜனாதிபதியின் செயலாளர் பதவிக்கு ஒஸ்டின் பெர்ணாண்டோ நியமனம்!
புதிய வருமான வரிச் சட்டம் அபிவிருத்திக்கு உதவியாக இருக்கும் - சர்வதேச நாணய நிதியம்!
கிராமிய அமைப்புக்களின் பொதுப் பணிக்கான சுயாதீன செயற்பாடுகளில் அரசியல் தலையிடு தவிர்த்து கொள்ளவேண்டும...
|
|
|


