அமைச்சர்களான டக்ளஸ் மற்றும் ஜீவன் நாடாளுமன்றில் தெளிவுபடுத்தல் – வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய பிரச்சினைக்கு புத்தாண்டின் பின் தீர்வு – ஜனாதிபதி உறுதியளித்ததாக அமைச்சர் பந்துல தெரிவிப்பு!

Thursday, April 6th, 2023

வவுனியா – வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலய பிரச்சினைக்கு புத்தாண்டின் பின் தீர்வு வழங்கப்படுமென, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் உறுதியளித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வவுனியாவிலுள்ள வெடுக்குநாறி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதி சிவன் விக்கிரகம் இனந்தெரியாத நபர்களால் கடந்த மாதம் தகர்த்தெறியப்பட்டது.

இது தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, நாடாளுமன்றத்திலும் இது, பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இப்பகுதிக்கு நேரடியாகச் சென்று அது தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தனர்.

அத்தோடு இவ்விடயம் தொடர்பில் இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் ஏனைய அமைச்சரிடம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இந்நிலையிலேயே அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் பந்துல குணவர்த்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வவுனியா – வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பிரச்சனை தொடர்பில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் இவ்வாரம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெளிவுபடுத்தினர்.

இப்பிரச்சினைக்கு புத்தாண்டின் பின்னர் தீர்வை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

அத்தோடு இவ்விவகாரம் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள தாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: