அமைச்சரவைக்கு வந்தது ஜனாதிபதியின் பாதுகாப்பு நிலவர மீளாய்வு தொடர்பிலான யோசனை!

Friday, September 8th, 2023

தேசிய பாதுகாப்புக் கொள்கை தயாரிப்பின் முதற்கட்டமான “பாதுகாப்பு நிலவர மீளாய்வு – 2030” என்ற யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நியதிகளுக்கமைய  சவால்களை எதிர்கொள்வதற்கான மாற்று அணுமுறைகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக “பாதுகாப்பு நிலவர மீளாய்வு – 2030” அவசியப்படுகிறது. அதன்படி இந்த மீளாய்வு மாநாட்டில் 2023 வரையான மற்றும் அதன் பின்னரான அணுகுமுறைகள் தொடர்பிலும் ஆராயப்படவுள்ளது.

இதற்கமைய, 

i.      2030 இல் இலங்கையின் மூலோபாய அறிவு மற்றும் சவால்கள் 

ii      இலங்கையின் பாதுகாப்பு முக்கியத்துவம்

iii      2030 பாதுகாப்பு கொள்கையின் நோக்கங்கள்

iv      மூலோபாய சவாலை எதிர்கொள்ளும் இயலுமை மற்றும் வலு

v      தற்போதுள்ள நிதி நிலைமைக்கு ஏற்ப அவசர தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துதல்.

இதற்காக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்க தலைமையிலான, மீளாய்வுக்குழு நியமிக்கப்பட்டிருப்பதோடு, அந்த குழுவில் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல்  ஜே.ஜே.ரணசிக. ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஆர். வணிகசூரிய ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் எண்ட்ரூ விஜேசூரிய இலங்கை வெளிநாட்டுச் சேவை அதிகாரி சஷிகலா பிரேமவர்தன மற்றும் நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் ஆலோசகர் டேனியல் அல்போன்ஸ் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சேவையிலிருக்கும் முப்படை அதிகாரிகள், வெளிநாட்டு சேவை அதிகாரிகள், திறைசேரி அதிகாரிகள், நிபுணர்கள் மற்றும் ஜனாதிபதியினால் நியமிக்கப்படவுள்ள செயலாளர் ஒருவரும் பணிக்குழுவும் அதற்காக ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

000

Related posts: