எதிர்வீட்டாரின் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் பலி!
Thursday, January 12th, 2017
வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலினால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதல் சம்பவமானது இன்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் மயானத்திற்குச் செல்லும் வழியிலுள்ள வீட்டில் வசிக்கும் 25 வயதான பாலரஞ்சன் பாலநிஷாந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் எதிர்வீட்டில் வசித்து வந்தவர்கள் தாக்கியதாலேயே குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts:
பேருந்து பின் சில்லுக்குள் அகப்பட்ட பெண் மரணம்!
இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் அனைவரும் வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனர் – மருத்துவர...
தொடர்ச்சியாக உதவிகளை பெற்றுத்தான் வாழ வேண்டும் என்கின்ற நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும் -. அரசாங்க அத...
|
|
|


