எதிர்வீட்டாரின் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்தில் பலி!
Thursday, January 12th, 2017வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலினால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தாக்குதல் சம்பவமானது இன்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் வவுனியா தேக்கவத்தைப் பகுதியில் மயானத்திற்குச் செல்லும் வழியிலுள்ள வீட்டில் வசிக்கும் 25 வயதான பாலரஞ்சன் பாலநிஷாந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் எதிர்வீட்டில் வசித்து வந்தவர்கள் தாக்கியதாலேயே குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
திடீரென அதிகரித்த மின் அழுத்தத்தால் பெறுமதிமிக்க பொருட்கள் அழிவு – நவாலி தெற்குப் பகுதியில் சம்பவம்!
20 வருட கால தொழில் வாழ்க்கையில் பரிசுப்பொருட்களுடன் சிரேஸ்ட அதிகாரிகளை சந்திக்க சென்றதில்லை : புலனாய...
கரையோரப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது - இராணுவத் தளபதி அறிவிப்பு!
|
|