அமெரிக்க கப்பலில் இலங்கை கடற்படையினர்!

Wednesday, July 27th, 2016

கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும், அமெரிக்கப் போர்க்கப்பலில் இலங்கை கடற்படையினருக்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்கக் கடற்படையின் ஈரூடக போக்குவரத்துத் தள போர்க்கப்பலான, யுஎஸ்எஸ். நியூ ஓர்லியன்ஸ் நேற்றுமுன்தினம்(24) மாலை கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும் நிலையில், சிறிலங்கா கடற்படையினருடன், அனர்த்த கால மற்றும் மனிதாபிமான உதவிகள் தொடர்பாக, இலங்கை கடற்படையினருக்கு அமெரிக்க கடற்படையினர் பயிற்சி அளித்து வருகின்றனர். அத்துடன், அமெரிக்க- சிறிலங்கா கடற்படையினருக்கிடையில், கூடைப்பந்து, எல்லே உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. இருநாட்டுக் கடற்படையினருக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்தப் பயணம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது

Related posts:


கொரோனா தொற்று நோயின் தற்போதைய அழிவை இந்தியா விரைவில் முறியடிக்கும் – - பாரத பிரதமருக்கு எழுதிய கடித...
தனக்கு தானே தீ மூட்டி பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு - யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் ச...
பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் தீர்மானம் இடைநிறுத்தம் - புதிய தவணை கற்றல் செயற்பாடுகள் நாளை ஆரம்பம் – ...