அமெரிக்காவின் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு – பால் உற்பத்தியை நவீனமயப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடல்!

Saturday, April 27th, 2024

அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பின்போது, அமெரிக்க உதவியுடன் முன்னெடுக்கப்படும் பால் உற்பத்தியை நவீனமயப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த திட்டத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் பால் உற்பத்திச் செயற்பாடுகளை விரிவுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும், இந்த துறையில் இளைஞர்களை அதிகளவில் உள்ளீர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் உறுதியளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

கடந்த எட்டு நாட்களில் 2,416 டெங்கு நோயாளர்கள் பதிவு - விஷேட டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனம் என தேசிய ட...
இதுவரை வழங்க முடியாத சாரதி அனுமதி அட்டைகளை மூன்றாம் தரப்பினர் மூலம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவ...
தனித்தனியே நின்று கட்சி அரசியல் செய்வதால் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்காது – ஜனாதிபதியின் கரங்களை...