அமரர் மிக்கோர்சிங்கம் பற்றிகின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி!
Saturday, December 17th, 2016
அமரர் மிக்கோர்சிங்கம் பற்றிகின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது இறுதி அஞ்சலி மரியாயை செலுத்தியுள்ளார்.
சுவாமியார் வீதி, கொழும்புத்துறை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்திற்கு சென்ற டக்ளஸ் தேவானந்தா பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதல்களையும் தெரிவித்துள்ளார்.
அமரர் மிக்கோர்சிங்கம் பற்றிக் ஈ.பி.ஆர். எல்.எவ். அமைப்பைச் சேர்ந்த ஜசீர் லோயிஷன் அவர்களின் தந்தையார் என்பதுடன் டக்ளஸ் தேவானந்தாவின் நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.




Related posts:
இனங்காணப்பட்டுள்ள மலேரியா நுளம்பு குறித்து பரிசோதனை!
போக்குவரத்து சேவையிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தாருங்கள்- வடக்கு மாகாண ஜனநாயக போக்குவரத்த...
தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளான அனைத்துலக தொழிலாளர் தினம் இன்று!
|
|
|


