அமரர் ஜெயராசா மகேஸ்வரி அம்மையாரின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலிமரியாதை!
Thursday, June 11th, 2020ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் திருமதி மல்லிகா பாலச்சந்திரன் அவர்களின் அன்புத் தாயார் திருமதி ஜெயராசா மகேஸ்வரி அம்மையாரின் பூதவுடலுக்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாமலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை செலுத்தினார்.
நேற்றையதினம் காலமான அமரர் ஜெயராசா மகேஸ்வரி அம்மையாரின் பூதவுடல் அன்னாரின் சாவகச்சேரி கோவிலாக்கண்டியுலுள்ள இல்லத்தில் அஞ்சலி மரியாதைக்காக வைக்கப்பட்டடிருந்த நிலையில் இன்றையதினம் அங்கு சென்’ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுதத்தியதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிரக்கம் குடம்பத்தினர் உறவினர் நண்பர்களுக்கு தனது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்திருந்தாரல்
இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர்கள் மற்றும் பிரதேசஙங்களின் நிரல்வாக பொறுப்பாளர்கள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் அமரர் ஜெயராசா மகேஸ்வரி அம்மையாரின் பூதவுடலுக்கு தமது இறுதி அஞ்சலிகளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|