அமரர் அரியதாஸ் சகாயராஜா அவர்களின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Thursday, June 18th, 2020

கடந்த 16 ஆம் திகதி தீயணைப்பு பணிக்காக சென்றுகொண்டிருந்த சமயம் விபத்துக்குள்ளாகி பலியான யாழ் மாநகர சபை ஊழியர் அமரர் அரியதாஸ் சகாயராஜா அவர்களின் பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளார்.

அன்னாரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பூதவுடலுக்கு இன்றையதினம்ஆமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது இறுதி அஞ்சலி மரியாதையை செலுத்தியிருந்ததுடன் அன்னாரின் பிரிவால் தயருற்றுள்ள குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்திருந்தார்.

முன்பதாக யாழ் மாநகர சபையில் இருந்து மணற்காட்டு பகுதியில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த சென்ற தீயணைப்பு வாகனம் கடந்த 16 ஆம் திகதி நீர்வேலிப் பகுதியில் விபத்துக்குள்ளாகியது;. இதில் சென்ற நிலையிலேயே தீயணைப்பு படை வீரரான 37 வயதுடைய அமரர் அரியதாஸ் சகாயராஜா மரணமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த அஞ்சலி நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொதண்டு தமது இறுதி அஞ்சலிகளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: