அப்துல் கலாமின் ஜனன தினம் யாழ்ப்பாணத்தில்!
Saturday, October 15th, 2016
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும் அணு விஞ்ஞானியுமான கலாநிதி அப்துல் கலாமின் 85வது ஜனன தினம் இன்று யாழ்ப்பாணத்தில் நினைவுக்கூறப்படுகின்றது.
யாழ்ப்பாண பிரதான நூலகத்தில் உள்ள இந்திய நிலையத்தில் இன்று காலை 9.30 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில் இந்திய துணை உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜன் பிரதம அதிதியாக கலந்து கொள்கிறார்.
குறித்த நிகழ்வில் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு கலாநிதி அப்துல் கலாமை நினைவுக்கூறவுள்ளனர். கடந்த 2013ஆம் ஆண்டு கலாநிதி அப்துல் கலாம் இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்த போது யாழ்ப்பாணத்திற்கு சிறப்பு விஜயம் ஒன்றையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுபீட்சத்தின் நோக்கு கொள்கையின் கீழ் கலைஞர்களுக்கு விபத்து மற்றும் மருத்துவக் காப்புறுதி!
ரஷ்யா மீதான தடை: மேற்கத்திய நாடுகளை கடுமையாகச் சாடும் சீன அதிபர்!
37,500 மெட்ரிக் டன் எரிபொருளுடன் கப்பலொன்று இலங்கை வருகை!
|
|