அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து செல்ல அரசாங்கத்துடன் கைகோருங்கள் – உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு!

Saturday, March 27th, 2021

நாட்டை வெற்றிபெறச்செய்யும் கொள்கை திட்டங்களுக்கு எதிராகவே இன்று எதிர்க்கட்சியினர் செயற்படுகின்றனர் என குற்றம் சுமத்தியுள்ள ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, அரசாங்கத்தின் கொள்கைத் திட்டங்கள் மற்றும் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து செல்ல தன்னுடன் பலமாக கைகோர்க்குமாறும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கு அழைப்பும் விடுத்துள்ளார்

பத்தரமுல்லவில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தள்ளார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த ஜனாதிபதி –

இன்று எதிர்க்கட்சியினர் நாட்டை வெற்றிபெறச்செய்யும் கொள்கை திட்டங்களுக்கு எதிராகவே செயற்படுகின்றனர். ஆனால் அபிவிருத்தி பணிகளை தொடர வேண்டும். அரசாங்கத்தின் திட்டங்களை முறையாக செயற்படுத்துவதன் மூலம் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும் தனிநபர்களை அல்லாமல், அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னிலைப்படுத்த அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஜனாதிபதி  கொள்கைகள் தோல்வியுற்றால் நாடு மீண்டும் அழிவுக்குள்ளாவதை தவிர்க்க முடியாது என்றும் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு அளித்த ஆதரவையும் அர்ப்பணிப்பையும் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை முன்னெடுப்பதில் அனைவரிடமிருந்தும் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதேநேரம் “சுபீட்சத்தின் பார்வை” கொள்கை திட்டத்தின் முக்கிய நோக்கம் வறுமையை ஒழிப்பதும் மக்களுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்துவதும் என்று சுட்டிக்காட்டியதுடன் . இதற்காக அரசாங்கம் ஒரு பாரிய வேலைத்திட்டத்தை செய்து வருகிறது என்றும் இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது கிடைத்துள்ள ஐந்து ஆண்டுகளில் கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதற்கும் தான் உறுதிபூண்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் மக்களின் பிரச்சினைகள் குறித்து பரந்த புரிதலைக் கொண்டுள்ளனர். கிராம அபிவிருத்தி திட்டத்தில் இது மிகவும் முக்கியமானது என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் ரீதியாக மட்டுமல்லாமல், நிர்வாக ரீதியாகவும் தலைமைத்துவத்தை வழங்கி கிராம அபிவிருத்தி திட்டத்தின் வெற்றிக்கு உதவவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேநேரம் யார் என்ன சொன்னாலும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அரசாங்கம் விசேட கவனம் செலுத்துகிறது. 2030 க்குள் மீள்பிறப்பாக்க சக்திவள பயன்பாட்டை 70% ஆக உயர்த்துவது, ஒவ்வொரு ஆண்டும் இரசாயன உரங்களின் பயன்பாட்டை 25% குறைத்தல், உள்ளிட்ட பல முக்கியமான முடிவுகள் சுற்றுச்சூழலை கருத்திற்கொண்டு எடுக்கப்பட்டுள்ளன என்றும் இதன்போது ஜனாதிபதி நினைவுபடுத்தியிருந்தார்.

000

Related posts: