அபராத தொகையை செலுத்த முடியாது சிறையிலுள்ள கைதிகளை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்க நடவடிக்கை – சிறைச்சாலைத் திணைக்களம் அறிவிப்பு!
Saturday, January 9th, 2021பல்வேறு குற்றச் செயல்களில் கைதாகி நீதிமன்றின் முன் நிறுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளில் அபராத தொகையை செலுத்த முடியாதவர்கள் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போது சிறைச்சாலைகளில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் கைதிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிறைச்சாலைத் திணைக்களம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகிறது.
இந்தநிலையில் ஜனாதிபதியின் உத்தரவின் பெயரில் சிறு குற்றங்களை செய்து சிறையிலுள்ள பலர் பொதுமன்னிப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட வருகின்றனர்
இந்நிலையிலேயே மேற்குறித்த கைதிகள் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கொரோனா நிவாரணங்கள் அரசியலாகக் கூடாது - தேர்தல் ஆணைக்குழு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை - பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்கள் புதிய முதலீடு...
ஜனாதிபதி தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வைப்பு பணத்தொகையை அதிகரிக்க தீர்மானம்!
|
|
உயர் தரப் பரீட்சைக்கு தோற்றும் பரீட்சாத்திகள் கணக்கிடு கருவியை பயன்படுத்த அனுமதி - பரீட்சைகள் திணைக்...
ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 25 ஆயிரத்து 942 பேருக்கு எதிராக வழக்கு – பொலிஸ் ஊடகப...
மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்பின்றி மேற்கொள்ளும் வகையில் அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் வெளியானது...