அபராதம் தொடர்பில் தேசிய முச்சக்கரவண்டிகள் சம்மேளனம் விடுத்துள்ள எச்சரிக்கை !

Thursday, April 4th, 2019

7 வீதி விதிமீறல்களுக்கான குறைந்தபட்ச அபராதத் தொகையை 25,000 ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானி அறிவித்தலுக்கு நாடாளுமன்றத்தின் அனுமதி வழங்கப்படுமாயின் அதனை எதிர்த்து நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை சுயதொழில் புரிவோருக்கான தேசிய முச்சக்கரவண்டிகள் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அந்த சம்மேளனத்தின் தலைவர் சுனில் ஜெயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த அபராத முறைமை எவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: