அபராதத்தை அதிகரிக்கும் யோசனைக்கு எதிர்ப்பு!

Wednesday, November 23rd, 2016

வாகன சாரதிகளுக்கு எதிரான ஆறு வகையான குற்றச்சாட்டுக்களுக்கான அபராதத்தை 25,000 ரூபா வரை அதிகரிக்க, அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனைக்கு அனைத்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க சம்மேளனம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தமது சங்கம் ஏனைய பஸ் சங்கங்கள், முச்சக்கர வண்டி சங்கங்கள் மற்றும் பாடசாலை வேன் சங்கங்கள் உள்ளிட்ட குழுவினருடன் இன்று மாலை கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாக, அனைத்து இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் ஸ்டென்லி பிரணாந்து குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்குடன் மட்டுமே, இவ்வாறு அபராதத் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

1240697080500

Related posts:

கோண்டாவில் இந்து விளயாட்டு நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகர் பங்கேற்று சிறப்பிப்பு!
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களை பதவியில் இருந்து விலகுமாறு தேர்தல்க...
நல்லூர் பிரதேச சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது – ஈ.பி.டி.ப...