அனைவரின் பங்களிப்புடன் புதிய யாப்பு உருவாக்கப்படும் – சபாநாயகர் கரு ஜயசூரிய!

Thursday, June 2nd, 2016

நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஒத்துழைப்புடனும் புதிய அரசியல் அமைப்பை உருவாக்கவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் அமைப்பு தொடர்பிலான மக்கள் கருத்து அறியும் குழுவின் அறிக்கை நேற்று குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜயநாயக்கவினால் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே சபாநாயகர், கரு ஜயசூரிய இதனை தெரிவித்தார்.

மக்கள் கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கி சிறந்த அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதன் இதன்போது குறிப்பிட்டார்.

Related posts: