அனைத்து பரீட்சைகளிலும் ஒரே சுட்டெண்!
Friday, November 17th, 2017
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் பயன்படுத்தும் பரீட்சை சுட்டெண்ணை ஏனைய அனைத்து பரீட்சைகளின் போதும் பயன்படுத்தக்கூடிய வகையிலான நடைமுறையை அமுல்படுத்துவது குறித்து பரீட்சை திணைக்களம் கவனம் செலுத்தி வருகின்றது.
பரீட்சை திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகம் பி. சனத் பூஜித, கொழும்பு ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் பயன்படுத்தப்படும் பரீட்சை சுட்டெண்ணை, பரீட்சார்த்திகள் சாதாரண தரம், உயர்தரம் உள்ளிட்ட ஏனைய பரீட்சைகளில் பயன்படுத்தக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
அரசுக்கு சொந்தமான மேலும் ஒரு எரிவாயு நிறுவனத்தை ஆரம்பிக்க நடவடிக்கை!
மனித கடத்தலை தடுக்க புதியபல நடவடிக்கைகளை எடுக்கத் திட்டம் - பாதுகாப்பு அமைச்சு!
உயர்தரப் பரீட்சையின் போது அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை - கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|