அனுராவின் சொத்துக்கள் சந்திரிகா,சுனேத்ரா வசமாகிறது!

Friday, October 6th, 2017

முன்னாள் சபாநாயகர் அனுர பண்டாரநாயக்கவின் சொத்துக்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க மற்றும் அவரது சகோதரி சுனேத்ரா பண்டாரநாயக்க ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சந்திரிகா, சுனேத்ராவின் சகோதரரான அனுர பண்டாரநாயக்க உயில் எழுதி வைக்காது மரணித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அனுரவின் சொத்துக்களை உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொள்ள நேற்றைய தினம் சந்திரிகா கொழும்பு மாவட்ட நீதிமன்றிற்கு சென்றுள்ளார்.   2008ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16ஆம் திகதி மரணித்த அனுர பண்டாரநாயக்கவின்  சொத்துக்களுக்கு உரிமையாளர்கள் என சகோதரிகளான சந்திரிகா, சுனேத்ரா ஆகியோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

அனுரவின் சாரதி, பாதுகாப்பு உத்தியோகத்தர் உள்ளிட்ட சிலர் இந்த சொத்துக்களுக்கு உரிமை கோரியிருந்தனர்.உயிலின் பிரதி ஒன்றையும் அவர்கள் நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தனர்.  எனினும், இந்த உயிலை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதுடன் சகோதரிகளுக்கு சொத்துக்களை வழங்குவதாக தீர்ப்பளித்துள்ளது.

Related posts: