அனர்த்தங்கள் இடம்பெறக்கூடிய காணிகள் அரசுடமையாக்கப்படவுள்ளன.

Tuesday, June 6th, 2017

அனர்த்தங்கள் இடம்பெறக்கூடிய மற்றும் இடம்பெற்ற காணிகளை அரசாங்கம் பொறுப்பேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

குறித்த காணிகள் பிரதேச செயலாளர்கள் ஊடாக பொறுப்பேற்று அரசுடமையாக்கப்பட உள்ளாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல இதனை தெரிவித்தார்

ஸ்ரீகோத்தா கட்சித் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்இதேவேளை நாட்டில் ஏற்பட்ட அனர்த்த நிலை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது

எதிர்கட்சிகளினால் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கைகளுக்கு அமைய இந்த விவாதத்தை நடத்த சபாநாயகர் ஒப்புதல் அளித்துள்ளார் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அமைச்சர் தினேஸ்குணவர்தன இதனை தெரிவித்தார்

Related posts: