அநுராதபுரத்தை மீண்டும் உலக புகழ் பெற்ற நகரமாக மாற்ற வேண்டும் – ஜனாதிபதி வலியுறுத்து!

Sunday, July 14th, 2024

அநுராதபுரம் பிரதேசத்தைமீண்டும் உலகப்புகழ் பெற்ற நகரமாக மாற்றுவதற்குதேவையான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

அனுராதபுரம் ஜயஸ்ரீ மஹா போதி வளாகத்தில், நிறுவப்பட்டுள்ள 150 கிலோவொட் சூரிய சக்தி மின்நிலையம் அமைப்பதற்கான பிஜரதிஷ்டை நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றது

இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக  ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க  இன்று காலை அநுராதபுரத்திற்கு சென்றிருந்தார்.  இதன்போது சியாம் மகா பிரிவின் பிரதம சங்கநாயக்கர் வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரத்தன நாயக்க தேரரை சந்தித்து கலந்துரையாடினார்.

அதன்பின்னர் வரலாற்று சிறப்பு மிக்க ஜய ஸ்ரீ மஹா போதியை தரிசனம்செய்து  ஜனாதிபதி ஆசி பெற்றுக்கொண்டார் மதஅனுஷ்டானங்களை தொடர்ந்து அனுராதபுரம் ஜயஸ்ரீ மஹா போதிவளாகத்தில் நிறுவப்பட்டுள்ள  150 கிலோவொட்சூரிய சக்தி மின்நிலையம் பிரதிஷ்டை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: