அத்துமீறி மீன்பிடித்த 53 இந்திய மீனவர்கள் கைது.!

Tuesday, August 8th, 2017

இலங்கை கடற்படையினரின் கப்பல், மீனவர்களின் படகுடன் மோதியதால் கடற்படைக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையே நடுக்கடலில் நேற்று இரவு மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, புதுக்கோட்டை, மண்டபம், இராமேஸ்வரம் பகுதிகளைச் சேர்ந்த 53 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்களிடமிருந்து 10க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகவும், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தியதாகவும் மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகள் - பொலிஸ் திணைக்கள பேச்சாளர் ஜாலி...
ஒரே இடத்தில் ஐந்து வருட சேவையை பூர்த்தி செய்த அனைத்து கிராம சேவை உத்தியோகத்தர்களும் ஜனவரி 1 ஆம் திகத...
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவளிக்கும...