அத்துமீறி மீன்பிடித்த 53 இந்திய மீனவர்கள் கைது.!

இலங்கை கடற்படையினரின் கப்பல், மீனவர்களின் படகுடன் மோதியதால் கடற்படைக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையே நடுக்கடலில் நேற்று இரவு மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, புதுக்கோட்டை, மண்டபம், இராமேஸ்வரம் பகுதிகளைச் சேர்ந்த 53 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்களிடமிருந்து 10க்கும் மேற்பட்ட படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களை காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாகவும், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தியதாகவும் மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச அலுவலகம் இராமநாதன் வீதியில் திறந்துவைப்பு!
தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்கும் திகதி நீடிக்கப்படமாட்டாது - தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு!
அதிக மதிப்புமிக்க பதக்கங்களைப் பெற்ற இராணுவ அதிகாரி சவேந்திர சில்வா சாதனை!
|
|