தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிக்கும் திகதி நீடிக்கப்படமாட்டாது – தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு!
Wednesday, March 11th, 2020நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான திகதி எந்தவொரு காரணத்திற்காகவும் நீடிக்கப்படமாட்டாது என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கைகள் கடந்த 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் 16 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவள்ளன.
எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னர், அரச ஊழியர்கள் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார்
Related posts:
இலங்கைக்கான விஜயத்தை நிறைவுசெய்து நாடு திரும்பினார் இந்திய பிரதமர்!
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!
இரண்டாம் தவணையுடன் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மிள ஆரம்பிக்கும் - வடமாகாண கல்வி அமைச்சின் செய...
|
|