அத்துமீறி பிரவேசித்த இந்திய மீனவர்களில் 20 பேர் விளக்கமறியலில்!
Thursday, April 28th, 2016இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களில் 20 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களை நேற்றிரவு ஏழு மணியளவில் மன்னார் நீதவான் ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஐா முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவர்களில் 20 பேரை எதிர்வரும் மே மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் 16 வயது சிறுவனொருவன் காணப்பட்டதாகவும், அந்த சிறுவனை சிறுவர் பராமரிப்பு நிலையில் வைக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்ததாக கடற்றொழில் திணைக்களத்தின் மன்னார் மாவட்ட உதவிப் பணிப்பாளர் பீ.எஸ் மிரண்டா குறிப்பிட்டுள்ளார்.
தலைமன்னாருக்கு தெற்கு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டபோது இந்திய மீனவர்கள் 21 பேரும் நேற்று நண்பகல் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் மூன்று படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
Related posts:
விடுதிகளிலிருந்து வெளியேறும்படி விஞ்ஞான பீட மாணவர்களுக்கு அறிவிப்பு! - பல்கலைக்கழக நிர்வாகம்!
இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாராகும் தென்கொரியா!
அடையாள அட்டைகளை பெற புதிய நடைமுறை - ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம்!
|
|