அத்துமீறி நுழைந்த வெளிநாட்டு படகு: கடற்படையினரால் 32 பேர் கைது!
Monday, May 1st, 2017காங்கேசன்துறை கடற்பகுதியில் அத்துமீறி உள்நுழைந்த 32 பேர் கொண்ட வெளிநாட்டு படகொன்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த படகு காங்கேசன்துறையில் பிரதேசத்தில் இருந்து 12 கடல் மைல் தூரத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்று(30) காலை குறித்த படகு சந்தேகத்தின் பேரில் கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.குறித்த படகில் இந்தியாவைச் சேர்ந்த 2 பேர், மியன்மாரைச் சேர்ந்த 14 பேர் மற்றும் 16 சிறுவர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இனி வாகன கொள்வனவு இல்லை – நிதியமைச்சர்!
நியூஸிலாந்து தாக்குதல்தாரி நாடு கடத்தலை எதிர்கொண்டிருந்தார் - அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெ...
இலங்கையின் நிதிச்சுமையை குறைக்க உதவும் வகையில் கடனுக்கு கால அவகாசம் வழங்க இந்தியா யோசனை!
|
|