அத்தியாவசிய மருந்துகளின் விலை குறைப்பு!

Monday, July 29th, 2019

முதல் கட்டமாக 48 அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு விலை ஒழுங்குறுத்தலை மேற்கொண்டதன் மூலம் 3,600 ரூபாவாக இருந்த மருந்தூசியின் விலை 400 ஆல் குறைவடைந்துள்ளது.

தனியார் துறைகளில் மருந்து வகைகளின் விலைகளில் கொள்வனவு செய்வதில் பாரிய நிவாரணம் பொதுமக்களுக்குக் கிடைத்திருப்பதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதனால் பொதுமக்கள் மருந்து வகைகளைப் பயன்படுத்துவதில் ஈடுபட்டிருப்பதாகவும், மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டதனால் இறக்குமதி செலவினை 9,200 மில்லியன் ரூபாவாக குறைக்க முடிந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் பொதுமக்களுக்கு வருடாந்தம் 4400 மில்லியன் ரூபா பெறுமதியான பயன்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வைத்தியசாலைகளில் நிலவிய மருந்து வகைகளுக்கான தட்டுப்பாட்டினை 2015 ஆம் ஆண்டின் பின்னர் படிப்படியாக குறைக்க முடிந்துள்ளது.

வைத்தியசாலைகள் மத்தியில் மருந்து வகைகளைப் பரிமாறுவதற்காக வகுக்கப்பட்டிருந்த நடைமுறை கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி சீர்குலைந்துள்ளது. இருப்பினும் இந்நிலை வழமை நிலைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: