நகுலேஸ்வரர் ஆலயத்திலிருந்த நந்திதேவர் காலமானார்!
Tuesday, July 30th, 2019
கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் கடந்த பல வருடங்களாக பராமரிக்கப்பட்ட மிகப்பெரிய காளை மாடு முதுமை காரணமாக உயிரிழந்துள்ளது.
இக்காளை மாடு இறைச்சிக்கு விற்பனை செய்யப்பட இருந்த நிலையில் சமூக ஆர்வலர்களினால் மீட்கப்பட்டு கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது.
இதனை அங்கு வரும் ஏராளமான அடியவர்கள் அதிசயத்துடன் பார்த்து செல்வது வழமையாகும்.
இந்நிலையில் முதுமை காரணமாக இறந்த மாட்டுக்கு சமய முறைப்படி நல்லடக்கம் இடம்பெற்றது.

Related posts:
இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளை பயன்படுத்துவதனாலேயே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர...
தேரரை கைது செய்தால் பாரிய பின் விளைவுகள் அரசாங்கத்தை எச்சரிக்கிறது பொது பல சேனா
நாட்டில் உருவாகும் மற்றொரு ஆபத்து - மக்களை எச்சரிக்கும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு!
|
|
|


