அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அடுத்துவரும் வாரங்களில் குறைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் – அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Sunday, July 24th, 2022

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியில் அன்றாடம் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்து வருகின்றன.

இவ்வாறான நிலையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அடுத்துவரும் வாரங்களில் குறைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ கூறியுள்ளார்.

மேலும் திறந்த கணக்குகள் மூலம் அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தையில் பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் அமைச்சர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை அச்சிடும் பணிகள் ஆரம்பம் - அரசாங்க அச்சுத் திணைக்கள...
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காகவே ஊரடங்கு உத்தரவு தளர்தப்படுகின்றது – ஜனாதிபதி கோட்டபாய ...
வடக்கிலுள்ள அனைத்து பாடசாலைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன – மிகுந்த மகிழ்ச்சியில் மாணவர்களும் பெற்றோர...