அத்தியாவசிய உயிர் பாதுகாப்பு ஒளடதங்கள் கைவசம் உள்ளன – சுகாதார அமைச்சு அறிவிப்பு!
Wednesday, July 5th, 2023அனைத்து அத்தியாவசிய உயிர் பாதுகாப்பு ஒளடதங்களும், தம்வசம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அவசர நிலைமை ஏற்பட்டால், அதற்கு முகங்கொடுக்கத் தயார் என, சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக்க ஸ்ரீ சந்தரகுப்த தெரிவித்துள்ளார்.
ஹொரண பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், 350 அத்தியவசிய ஒளடதங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சுமார் 100 ஒளடதங்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. எவ்வாறிருப்பினும், ஒளடதங்கள் தங்களுக்கு தொடர்ச்சியாக கிடைத்து வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நடைபாதைகளில் தரிக்கப்பட்டிருக்கும் வாகனங்களை இழுத்துச் செல்லும் புதிய நடவடிக்கை - வாகன சாரதிகளுக்கு ...
இலங்கை நெருக்கடியிலிருந்து நிதி விவேகம் மற்றும் நல்லாட்சி போன்ற படிப்பினைகளை இந்தியா கற்றுக்கொண்டுள்...
உரிய நேரத்தில் பணம் கிடைக்காவிட்டால் வாக்குச் சீட்டுகள் அச்சிடுவதில் தாமதம் ஏற்படும் - அரசாங்க அச்சக...
|
|