அதிவிஷேட மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்குள் வந்த 230 பயணிகள் !

Sunday, May 3rd, 2020

நெதர்லாந்தில் இருந்து 230 பயணிகளை ஏற்றிச் சென்ற சிறப்பு போயிங் 767 – 300ER விமானம் இன்று மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இந்த விமானம் இலங்கையின் காலி துறைமுகத்தில் தங்கியிருக்கும் வணிகக் கப்பல்களுக்குத் தேவையான குழுவினரையே அழைத்துவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களை சிறப்பு மனிதாபிமான அடிப்படையில் நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் வந்திறங்கிய அனைவரும் இலங்கை விமானப்படையின் மருத்துவ அணு, உயிரியல் மற்றும் கதிரியக்க மறுமொழி பிரிவின் அதிகாரிகளின் மேற்பார்வையில் சிறப்பு கிருமிநாசினி பணிக்கு உட்படுத்தப்பட்டு பேருந்துகள் மூலம் காலி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனிடையே திரும்பிப் புறப்படவிருக்கும் இவ் விமானத்தில் நெதர்லாந்திற்கு புறப்படவுள்ள கப்பலில் 53 பணியாளர்கள் இன்று இரவு மத்தள விமான நிலையத்திற்கு வரவுள்ளனர் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts: