அதிநவீன நகரம் இலங்கையில் – கட்டார் உறுதி!

Friday, November 24th, 2017

சகல வசதிகளுடன் கூடிய நகரத்தை இலங்கையில் அமைத்துக் கொடுப்பதாக கட்டார் அரசாங்கம் உறுதி வழங்கியுள்ளது.

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் பங்கேற்ற போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசி மூலம் கட்டார் அரசாங்கம் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் விரும்பும் ஓர் இடத்தில் இந்த நகரத்தை அமைக்க முடியுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். முதல் முறையாக கட்டார்அரசாங்கத்தினால் இலங்கைக்கே இவ்வாறான ஓர் நகரம் வழங்கப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார். நகரத்தை அமைப்பதற்குஇடமொன்றை ஒதுக்கித் தருமாறு கட்டார் அதிகாரிகள் கோரியுள்ளனர்.

Related posts: